கோவையில் பதிவு செய்யாத மகளிர் விடுதிகள் மீது நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில் பதிவு செய்யாமல் இயங்கும் மகளிர் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாதி எச்சரித்துள்ளார். அனைத்து விடுதிகளும் இணையம் வழியாக பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் பதிவு செய்யாமல் இயங்கும் மகளிர் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாதி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் முறைப்படுத்தும் சட்டம், 2014, (விதிகள் 2015)ன்படி அனைத்து பணிபுரியும் மகளிர் விடுதிகளும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட விடுதிகள் தவறாமல் புதுப்பிக்கப்பட வேண்டும். இதற்காக இணைய வழி நடைமுறையை பின்பற்ற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் நடத்தும் தங்கும் பெண்கள் விடுதி, பெண் குழந்தைகள், சிறார் இல்லங்கள், மாணவியர் விடுதிகள், பணிபுரியும் மகளிர் விடுதிகள் குழந்தைகளுக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் அனைத்தும் ஒழுங்குமுறைச் சட்டம், 2014 மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அனைத்து விடுதிகளும் போதிய இடவசதியுடன் சுற்றுப்புற சுகாதாரத்துடன், தங்குபவர்களின் சுகாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அதோடு, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை மற்றும் சம்மந்தப்பட்ட துறைகளிடமிருந்து தடையின்மை சான்று பெற்று, உரிய ஆவணங்களுடன் விடுதியை பதிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் இதுவரை பதிவு மேற்கொள்ளாமல் செயல்படும் மகளிர் விடுதிகள் அனைத்தும் உடனடியாக இணையம் வாயிலாக பதிவு செய்து, உரிமம் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிவிப்பை மீறி செயல்படும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாதி எச்சரித்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...