2026-ல் ஆட்சியில் பங்கு: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சர்ச்சைக்குரிய போஸ்டர்கள்

கோவை அவினாசி சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒட்டிய போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 2026-ல் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு பெறுவோம் என்ற வாசகம் கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



Coimbatore: கோவை அவினாசி சாலையில் உள்ள தண்டு மாரியம்மன் கோயில் எதிரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒட்டிய போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த போஸ்டர்களில் "2026-ல் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை ரமேஷ் என்ற பெயரில் உள்ள முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், "எழுச்சித் தமிழன் முதல் முதலில் அரசுப் பணியில் சேர்ந்தது கோவையில் தான். அரசியல் பயணத்தை தொடங்குவதற்காக அடிக்கல் நாட்டிய பின்பு மதுரைக்கு மாற்றலாகி சென்று டி.பி.ஐ என்ற இயக்கத்தை வழி நடத்தினார். பின்னர் தலித் தலைவர் மலைச்சாமி அவர்களுடன் கைகோர்த்து அவருக்குப் பின் அதனை வழி நடத்தி, பின்பு அரசியல் கட்சியாக மாற்றி தேர்தல் அரசியலை புறக்கணித்து விடுதலை சிறுத்தை இயக்கத்தை தொடங்கினார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த பதிவில், "எனது அருமை நண்பர்கள் கோவையில் முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' என்ற புதிய அத்தியாயத்தை முதன் முதலில் கோவையில் தொடங்கி உள்ளார்கள். அவர்களுக்கு கொங்கு சம்பத் மற்றும் அனைத்து விடுதலை சிறுத்தை நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்" எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், சென்னையில் இருந்து கோவை சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்ணின் மைந்தன், ஒயிட்ஹவுஸ் ந.செல்லத்துரை மத்திய சென்னை நாடாளுமன்ற மேலிட பொறுப்பாளர் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். "எழுச்சித் தமிழர் முதன் முதலில் கோவையில் காலடி வைத்த மண்ணில் இது போன்ற புரட்சி முதலில் தோன்றி இருக்கின்றது. உங்களுக்கு வாழ்த்துக்கள்" என்றும் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர்கள் மற்றும் சமூக வலைதள பதிவுகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...