மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: கோவையில் உடலுக்கு அரசு மரியாதை

உடுமலையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த 27 வயது இளைஞரின் ஆறு உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. கோவை அரசு மருத்துவமனையில் அவரது உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.



கோவை: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா கடத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா (27) என்ற இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு கோவை அரசு மருத்துவமனையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

கார்த்திக் ராஜா ஒரு பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். கடந்த செப்டம்பர் 15 அன்று, உடுமலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்துக்குள்ளானார். உடனடியாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார்.

அவரது உடலில் இருந்து சிறுநீரகம், இதயம், கண் உள்ளிட்ட ஆறு உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இன்று (செப்டம்பர் 17) கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அவரது உடலுக்கு தலைமை மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் அரசு மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...