பாரதியார் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழா அக்டோபர் 14 அன்று நடைபெறுகிறது

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழா அக்டோபர் 14 அன்று நடைபெறுகிறது. 2023 ஜனவரி முதல் 2024 செப்டம்பர் வரை பயின்று முடித்த மாணவர்கள் பங்கேற்கலாம்.


Coimbatore: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழா வரும் அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெற உள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

2023 ஜனவரி 23 முதல் 2024 செப்டம்பர் வரை பல்கலைக்கழகம், உறுப்பு கல்லூரிகள் மற்றும் தொலைநிலைக் கல்வி வாயிலாக பயின்று முடித்து, தற்காலிக சான்றிதழ் பெற்றவர்கள் இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தகுதியுடையவர்கள் ஆவர்.

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்களது கல்லூரி முதல்வர்களிடம் விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். மேலும், பல்கலைக்கழக இணையதளத்திலிருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

2023 ஆகஸ்ட் 16 முதல் 2024 செப்டம்பர் 25 ஆம் தேதி வரை Ph.D. முடித்தவர்களும் இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம். Ph.D. மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு www.b-u.ac.in அல்லது https://b-u.ac.in/298/convocation என்ற இணையதளங்கள் வாயிலாக தகவல்களைப் பெறலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...