பாரதியார் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழா அக்டோபர் 14 அன்று நடைபெறுகிறது

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழா அக்டோபர் 14 அன்று நடைபெறுகிறது. 2023 ஜனவரி முதல் 2024 செப்டம்பர் வரை பயின்று முடித்த மாணவர்கள் பங்கேற்கலாம்.


Coimbatore: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழா வரும் அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெற உள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

2023 ஜனவரி 23 முதல் 2024 செப்டம்பர் வரை பல்கலைக்கழகம், உறுப்பு கல்லூரிகள் மற்றும் தொலைநிலைக் கல்வி வாயிலாக பயின்று முடித்து, தற்காலிக சான்றிதழ் பெற்றவர்கள் இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தகுதியுடையவர்கள் ஆவர்.

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்களது கல்லூரி முதல்வர்களிடம் விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். மேலும், பல்கலைக்கழக இணையதளத்திலிருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

2023 ஆகஸ்ட் 16 முதல் 2024 செப்டம்பர் 25 ஆம் தேதி வரை Ph.D. முடித்தவர்களும் இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம். Ph.D. மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு www.b-u.ac.in அல்லது https://b-u.ac.in/298/convocation என்ற இணையதளங்கள் வாயிலாக தகவல்களைப் பெறலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...