பாரதியார் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழா அக்டோபர் 14 அன்று நடைபெறுகிறது

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழா அக்டோபர் 14 அன்று நடைபெறுகிறது. 2023 ஜனவரி முதல் 2024 செப்டம்பர் வரை பயின்று முடித்த மாணவர்கள் பங்கேற்கலாம்.


Coimbatore: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழா வரும் அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெற உள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

2023 ஜனவரி 23 முதல் 2024 செப்டம்பர் வரை பல்கலைக்கழகம், உறுப்பு கல்லூரிகள் மற்றும் தொலைநிலைக் கல்வி வாயிலாக பயின்று முடித்து, தற்காலிக சான்றிதழ் பெற்றவர்கள் இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தகுதியுடையவர்கள் ஆவர்.

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்களது கல்லூரி முதல்வர்களிடம் விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். மேலும், பல்கலைக்கழக இணையதளத்திலிருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

2023 ஆகஸ்ட் 16 முதல் 2024 செப்டம்பர் 25 ஆம் தேதி வரை Ph.D. முடித்தவர்களும் இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம். Ph.D. மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு www.b-u.ac.in அல்லது https://b-u.ac.in/298/convocation என்ற இணையதளங்கள் வாயிலாக தகவல்களைப் பெறலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...