உடுமலையில் அற்புத அன்னை ஆலய தேர்த்திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

உடுமலை அற்புத அன்னை ஆலயத்தில் தேர்த்திருவிழா நடைபெற்றது. இரவு 8 மணிக்கு தொடங்கிய தேர் பவனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி சாலையில் உள்ள அற்புத அன்னை ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்தது. கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இத்திருவிழா, பத்து நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.

திருவிழாவின் ஒவ்வொரு நாளும் மாலை 5.30 மணிக்கு செப மாலை, நவநாள், திருப்பலி, சிறப்பு தியான மறையுரை, நற்கருணை ஆராதனை மற்றும் வேண்டுதல் நிகழ்வுகள் நடைபெற்றன. இறுதி நாளான நேற்று காலை 8.30 மணிக்கு பங்குப்பெருவிழா திருப்பலி நடைபெற்றது.



இரவு 8 மணிக்கு தேர் பவனி வருதல் நிகழ்ச்சி தொடங்கியது.



அற்புத அன்னை ஆலயத்தில் இருந்து புறப்பட்ட தேர், பள்ளிவாசல் வீதி, தலை கொண்ட அம்மன் வீதி, தங்கம்மாள் ஓடை சாலை, பொள்ளாச்சி-உடுமலை சாலை, தளி சாலை வழியாக சுற்றி வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.



பேண்ட் வாத்தியம் முழங்க, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தேருக்கு முன்பு சிலுவை மற்றும் கைகளில் விளக்கு, மலர்கள் ஏந்தியவாறு பாடல்களை பாடி ஊர்வலமாக சென்றனர். இந்நிகழ்வின் போது உடுமலை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...