தாராபுரத்தில் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா: அமைச்சர்கள் மரியாதை

தாராபுரத்தில் திமுக நகரக் கழகம் ஏற்பாடு செய்த பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழாவில் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மௌன ஊர்வலம் மற்றும் கொடியேற்றம் நடைபெற்றது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக நகரக் கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழா நிகழ்வுகள் திமுக நகரக் கழக செயலாளர் சு.முருகானந்தம் தலைமையில் நடைபெற்றன. முதலில், பூளவாடி பிரிவு பகுதியில் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து மௌன ஊர்வலம் துவங்கி, சின்னக்கடை வீதி, டி.எஸ். கார்னர், ஜவுளிக்கடை வீதி, பூக்கடை கார்னர் வழியாக அண்ணா சிலையை அடைந்தது.



அண்ணா சிலைக்கு வந்த பிறகு, அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அமைச்சர்கள் திமுக கொடியை ஏற்றி வைத்தனர். மேலும், அங்கிருந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவரும் திமுக ஒன்றியச் செயலாளருமான எஸ்.வி. செந்தில் குமார், தாராபுரம் நகர அவைத் தலைவர் கதிரவன், நகர மன்றத் தலைவர் பாப்பு கண்ணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தனசேகர், திமுக நகரத் துணைச் செயலாளர் கமலக்கண்ணன், மாவட்டத் துணைச் செயலாளர் பிரபாவதி பெரியசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி ராஜேந்திரன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திமுக தாராபுரம் ஒன்றிய, நகர, பேரூர் இன்னாள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...