அன்னபூர்ணா விவகாரம்: எதிர்க்கட்சிகள் பெரிதாக்குவதாக தே.மு.தி.க விஜய பிரபாகரன் குற்றச்சாட்டு

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தே.மு.தி.க தலைவர் விஜய பிரபாகரன், அன்னபூர்ணா விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்துவதாகவும், அதற்காக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் தேவையற்றவை எனவும் கூறினார்.



Coimbatore: கோவை பேரூர் பகுதியில் நடைபெற்ற தே.மு.தி.க நிர்வாகி ஒருவரின் திருமண விழாவில் கலந்து கொண்ட தே.மு.தி.மு.க தலைவர் விஜய பிரபாகரன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் கூறியதாவது: "தே.மு.தி.க 20-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தோம். அனைத்து தொகுதிகளிலும் சுமார் 3,000 பேருக்கு அன்னதானம் வழங்கினோம். மேலும் கோவை அரசு மருத்துவமனையில் செப்டம்பர் 14 அன்று பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினோம். அதில் 16 குழந்தைகள் ஆண் குழந்தைகள், கேப்டன் மீண்டும் பிறந்து வந்ததாகவே கருதினேன், மகிழ்ச்சியாக இருந்தது."



"அன்னபூர்ணா விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பெரிதாக்குகின்றனர். காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர், இதை தேவையற்ற விஷயமாக நான் பார்க்கிறேன். அன்னபூர்ணா சீனிவாசனை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தார்களா என அவர் தான் கூற வேண்டும்."

திருமாவளவனின் சமீபத்திய பதிவு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விஜய பிரபாகரன், "அந்த பதிவை அவர்தான் போட்டாரா? அல்லது அட்மின் போட்டாரா? என தெரியவில்லை. சில நேரங்களில் அட்மின் பதிவு போட்டதாக கூறி முடித்து விடுவார்கள். அதனால் அதற்கு கருத்து சொல்ல தேவை இல்லை," என்றார்.

மேலும் அவர், "விசிக தலைவர் திருமாவளவன் தொடுவதற்கு முன்னதாகவே தேமுதிக ஏராளமான மதுவிலக்கு போராட்டங்கள், மாநாட்டை நடத்தியுள்ளது. தற்போது அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது. தேமுதிக சார்பில் நாங்கள் வரவேற்கிறோம்," எனக் கூறினார்.

கோவை நகரின் உள்கட்டமைப்பு குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். "நீண்ட நாளுக்கு பிறகு கோவை வருகிறேன். இப்போதும் சாலைகள் குண்டும் குழியுமாக தான் உள்ளது. பாலங்கள் கட்டி முடிக்கப்படவில்லை," என்று சுட்டிக்காட்டினார்.

இறுதியாக, தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அவர் பேசினார். "தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை, கள்ளச்சாராயம் என பிரச்சனைகள் உள்ளது. தேவை இல்லாமல் கார் பந்தயம் நடத்தினர். இதெல்லாம் விளம்பரத்திற்கான நடவடிக்கையாக பார்க்கிறேன்," என்று முடித்தார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...