அன்னபூர்ணா உரிமையாளரை அவமானப்படுத்தியது கோவை மக்களை அவமானப்படுத்தியது போல் - கோவை திமுக எம்பி கணபதி ராஜ்குமார்

கோவை திமுக எம்பி கணபதி ராஜ்குமார் அன்னபூர்ணா உரிமையாளர் மிரட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்தார். ஜிஎஸ்டி விதிப்பால் கொங்கு மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாஜக அரசு குறித்து விமர்சித்தார்.



கோவை: கோவை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் கோவை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உரிமையாளர் வருத்தம் தெரிவித்த தனிப்பட்ட வீடியோவை பாஜகவினர் வெளியிட்ட விவகாரம் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.



கணபதி ராஜ்குமார் கூறுகையில், "மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட்டத்தில் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் கொங்கு அழகு தமிழில் கோரிக்கையை பேசினார். பாஜகவினர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அடுத்த நாள் அவரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கப்படுகிறார். அதேபோல், சூலூரில் செல்ஃபோன் உதிரிபாகங்கள் தொடர்பாக இளைஞர் கேட்டதற்கு மிரட்டல் விடுத்துள்ளனர்," என்றார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, "கொங்கு மண்டலத்தில் அதிகமான பாதிப்பு ஜி.எஸ்.டி.யால் தான். யாரும் கேள்வி கேட்க கூடாது என்ற தர்பார் ஆட்சி தான் நடக்கிறது. பிஸ்கட் 18%, தங்கத்திற்கு 3% விதித்த போது அறிந்துகொள்ளலாம் என யாருக்கான ஆட்சி என தெரிந்து கொள்ளலாம். அந்த வீடியோ அவரது அனுமதி பெற்று வெளியிடப்பட்டதா? அது தனிமனித சட்ட விதிமீறல். அந்த காட்சியை பார்க்கலாம், கற்காலத்திற்கு எடுத்து சென்றது போல் இருந்தது."

"அன்னபூர்ணா கோவையின் முகமாக பார்க்கப்படுகிறது. அன்னபூர்ணா உரிமையாளரை அவமானப்படுத்தியது கோவை மக்களை அவமானம் படுத்தியது போல் உள்ளது. ஜி.எஸ்.டி.யால் 30% தொழிற் கூடங்கள் மூடப்பட்டு விட்டது. பெண்கள் சமூக நீதி பற்றி பேச தகுதி உள்ள கட்சி திமுக. பிரித்தால்வதே இவர்களின் வேலை. மதத்தால், ஜாதியால் பிரித்தவர்கள் தற்போது ஆண், பெண் பற்றி பேசுகிறார்கள். குறைதீர் கூட்டம் என்ற பெயரில் அவர்களின் குட்டை அவர்களே வெளிப்படுத்தி உள்ளனர். கோவை மக்களை அவமானப்படுத்தி உள்ளனர்," என்று கூறினார்.

கணபதி ராஜ்குமார் மேலும் கூறுகையில், "அரசுக்கு எதிரான நிலை மத்திய அரசுக்கு எதிராக தான் தமிழகத்தில் இருந்தது. தேர்தலின் போது நாங்கள் எதிர்க்கட்சி பற்றி பேசாமல் செய்த சாதனைகள் பற்றி பேசினோம், வெறுப்பரசியல் பேசக்கூடாது என்று முதல்வரின் ஆணைக்கினங்க பேசவில்லை. அவர் மிரட்டப்பட்டது வன்மையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டு திமுக துணை நிற்கும். கொங்கு தமிழில் நன்றாக அனைவரையும் சென்றடையும் வகையில் பேசியது சமூக வலைதளத்தில் பரவியதும் காரணம்," என்றார்.

"மத்திய அரசால் தான் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு. வீடியோ வெளியிட்டதற்கு தான் அண்ணாமலை வருத்தம் தெரிவித்தார். அந்த சம்பவத்திற்கு அண்ணாமலை வருத்தம் தெரிவிக்கவில்லை. முதல்வர் பங்கேற்ற மாணவர்கள் உதவி தொகை விழாவில் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனுக்கு முதல் வரிசையிலேயே இருக்கை கொடுத்தோம், நாங்கள் அனைவருக்கும் மரியாதை கொடுக்கிறோம்," என்று கூறி முடித்தார்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...