கோவை மாமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி குற்றச்சாட்டு: திமுக-அதிமுக இடையே வாக்குவாதம்

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் 'ஸ்டிக்கர் ஆட்சி' குற்றச்சாட்டு எழுப்பினார். இதனால் திமுக-அதிமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


Coimbatore: கோவை மாநகராட்சி விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் இன்று (செப்டம்பர் 13) மாமன்ற சாதாரணக் கூட்டம் நடைபெற்றது. மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையர் க.சிவகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும், மண்டல குழுத் தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.



கூட்டத்தின் போது, அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் பிரபாகரன் பேசுகையில், மாநகராட்சியில் "ஸ்டிக்கர் ஆட்சி" நடப்பதாகக் குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டை திமுக கவுன்சிலர்கள் கடுமையாக எதிர்த்தனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் மாமன்றக் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் அமைதி திரும்பியதும், மீண்டும் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்த சம்பவம் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...