கோவை தொண்டாமுத்தூர் அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு; உறவினர்கள் சாலை மறியல்

கோவை தொண்டாமுத்தூர் அருகே இயற்கை உபாதையை கழிக்க சென்ற நபர் யானை தாக்கி உயிரிழந்தார். உறவினர்கள் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் தடாகம், தொண்டாமுத்தூர், மருதமலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி வெளியேறும் காட்டுயானைகள் இப்பகுதிகளில் உள்ள விளை நிலங்களை சேதப்படுத்தும் நிகழ்வுகளும் குடியிருப்புகளை சேதப்படுத்தும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்நிலையில், கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு கெம்பனூர் சுற்றுக்கு உட்பட்ட அட்டுக்கல் பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவர் இன்று (செப்.13) அதிகாலை காலைக்கடன் கழிக்க சென்ற போது காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வனத்துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், காவல்துறையும் வனத்துறையும் அலட்சியமாக செயல்படுவதாக கூறி உயிரிழந்த தேவராஜின் உறவினர்கள் தொண்டாமுத்தூர் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



இந்நிலையில் இதை அறிந்த கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி இன்று நேரில் சென்று யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களுக்கு நிதி உதவி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...