மடத்துக்குளத்தில் தமிழ் புலிகள் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் - மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் தமிழ் புலிகள் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் பங்கேற்று கட்சி வளர்ச்சி குறித்து உரையாற்றினார். முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் திருப்பூர் தெற்கு மற்றும் கிழக்கு மாவட்ட தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்டச் செயலாளர்கள் திருப்பதி மற்றும் காளிமுத்து ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழ் புலிகள் கட்சியின் மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்து உரையாற்றினார். பின்னர், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அருந்ததியர் உள் ஒதுக்கீடு தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அளித்துள்ள மறுசீராய்வு மனுவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

உடுமலை கோட்டாட்சியர் கண்டிசன் நிலங்களுக்கு NOC வழங்குவதை தமிழ் புலிகள் கட்சி வன்மையாக கண்டித்தது. மேலும், உடுமலைப்பேட்டை சார்பதிவாளர் போலி பத்திரங்களை தயாரித்து வழங்குவதற்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

எதிர்வரும் செப்டம்பர் 28, 2024 அன்று கோவையில் 3 சதவீத உள் ஒதுக்கீட்டை பெற்றுத் தந்த திராவிட மாடல் அரசுக்கு பாராட்டு விழா நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், Dharapuram ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...