கோவை வடக்கு மாவட்ட திமுகவின் பொது உறுப்பினர் கூட்டம் கோவில்பாளையத்தில் நடைபெற்றது

கோவை வடக்கு மாவட்ட திமுகவின் பொது உறுப்பினர் கூட்டம் கோவில்பாளையத்தில் உள்ள ஸ்ரீ குமரன் மஹாலில் நடைபெற்றது. மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா மற்றும் மாநில மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.


கோவை: கோவை வடக்கு மாவட்ட திமுகவின் பொது உறுப்பினர் கூட்டம் கோவில்பாளையத்தில் உள்ள ஸ்ரீ குமரன் மஹாலில் செப்டம்பர் 12 அன்று நடைபெற்றது.



இக்கூட்டத்திற்கு கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமை வகித்தார்.



கழக கொள்கை பரப்பு செயலாளரும் மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா M.A,B.L., மற்றும் மாநில மாணவரணி தலைவர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.



இந்த கூட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட பல்வேறு நிலைகளில் உள்ள நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், பேரூர் மற்றும் வார்டு கழக செயலாளர்கள், ஊராட்சி கிளை கழக செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.



மேலும், சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாமன்ற உறுப்பினர்கள், பாகநிலை முகவர்கள் (BLA 2), பூத் கமிட்டி உறுப்பினர்கள், கழக மூத்த முன்னோடிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் என பலதரப்பட்ட உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...