சங்கனூர் பள்ளம் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் M சிவகுரு பிரபாகரன் சங்கனூர் பள்ளத்தில் நடைபெறும் ரூ.49 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தார். இரத்தினபுரி பகுதியில் பழுதடைந்த மழைநீர் வடிகால்களை சீரமைக்க உத்தரவிட்டார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் M சிவகுரு பிரபாகரன் இன்று (12.09.2024) மத்திய மண்டலத்திற்குட்பட்ட சங்கனூர் பள்ளத்தில் நடைபெறும் ரூ.49 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், மத்திய மண்டலம், வார்டு எண் 46-க்குட்பட்ட இரத்தினபுரி, சாஸ்திரி வீதியிலும் ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.



இப்பகுதியில் பழுதடைந்த மழைநீர் வடிகால்களை சீரமைக்க உரிய திட்டமதிப்பீடு தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்.

ஆணையருடன் மத்திய மண்டலத் தலைவர் மீனாலோகு, நகர திட்டமிடுநர் குமார், உதவி ஆணையர் செந்தில்குமரன், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் சரவணகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.



இந்த ஆய்வு, நகரின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான மாநகராட்சியின் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். சங்கனூர் பள்ளம் மேம்பாட்டுப் பணிகள் முடிவடைந்தால், அப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...