கோவை துடியலூரில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்: மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி பாராட்டு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டியில் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, கவுன்சிலர் கார்த்திக்கின் தேர்தல் பணியை பாராட்டினார்.



Coimbatore: கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ஆ.ரவி உரையாற்றினார். அவர் பேசுகையில், "கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் நாடாளுமன்ற தேர்தலுக்காக உழைத்து வெற்றி பெற்றதைபோல, வரும் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெற இப்போது இருந்தே தீவிரமாக செயல்பட வேண்டும்" என்றார்.



மேலும் அவர், "தலைவருக்கு நாம் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தரவேண்டும்" என்று வலியுறுத்தினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றுத் தந்த கார்த்திக்கை பாராட்டினார்.

இக்கூட்டத்தில் துணைச்செயலாளர் அசோக்பாபு ஆறுகுட்டி, முன்னாள் எம்.பி நாகராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், எஸ்.எஸ்.குளம் ஒன்றிய செயலாளர் சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர் வீரபத்ரன், ஒன்றிய கவுன்சிலர் கலா சாந்தாராம், பேரூர் கழக செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரங்கநாயகி, தலைமை கழக பேச்சாளர் சஹா விக்னேஷ், ஒன்றிய அவைத்தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்ராஜா, சண்முகசுந்தரம், ஒன்றிய துணை செயலாளர் அசோக்குமார், குருடம்பாளையம் சரவணன், ஓட்டுநர் அணி தலைவர் பழனிச்சாமி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மனோஜ், மாவட்ட ஐ.டி விங்க் ஹரி, நாயக்கன்பாளையம் சந்துரு ஜெகவி, கோவனூர் ரவி, குருடம்பாளையம் ஊராட்சி துணைத்தலைவர் வசந்தாமணி விஸ்வநாதன் உட்பட பல கட்சி நிர்வாகிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...