பீளமேடு, சமத்தூர், கோவில்பாளையம் பகுதிகளில் நாளை மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு

கோவையில் பீளமேடு, சமத்தூர், கோவில்பாளையம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்.12) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.


Coimbatore: கோவை மின் வாரிய அதிகாரிகள் இன்று வெளியிட்ட அறிவிப்பில், நாளை (செப்டம்பர் 12) பீளமேடு, சமத்தூர் மற்றும் கோவில்பாளையம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

பீளமேடு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், காவலர் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திப்பாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி.ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.ஜி எஸ்டேட், பி.எஸ்.ஜி. மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லே-அவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடுபுதூர், எல்லைத் தோட்டம், வஉசி காலனி, பி.கே.டி.நகர், அகிலாண் டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதிபுரம், பங்கஜா மில், தாமு நகர், பாலசுப்பிரமணியம் நகர், பாலகுரு கார்டன், சௌரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், பார்சன் அப்பார்ட்மென்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி சாலை(ஒரு பகுதி), நஞ்சுண்டாபுரம் சாலை மற்றும் திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

சமத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சமத்தூர், ஆவல்சின்னம்பாளையம், தளவாய்பாளையம், பாளையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பொள்ளாச்சியூர், பில்சினாம்பாளையம், ஜமின்கொட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சரி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

கோவில்பாளையம் துணை மின் நிலையத்திலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், குரும்பபாளையம், மண்ணிக்கம்பாளையம், அக்ரகார சாமகுளம், குன்னத்தூர், சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம், கல்லிபாளையம், மொண்டிகாலிபுதூர், கொண்டையம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

இந்த மின்தடை அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்கும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் இதனை கவனத்தில் கொண்டு தங்களது அன்றாட பணிகளை திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...