பீளமேடு, சமத்தூர், கோவில்பாளையம் பகுதிகளில் நாளை மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு

கோவையில் பீளமேடு, சமத்தூர், கோவில்பாளையம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்.12) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.


Coimbatore: கோவை மின் வாரிய அதிகாரிகள் இன்று வெளியிட்ட அறிவிப்பில், நாளை (செப்டம்பர் 12) பீளமேடு, சமத்தூர் மற்றும் கோவில்பாளையம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

பீளமேடு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், காவலர் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திப்பாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி.ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.ஜி எஸ்டேட், பி.எஸ்.ஜி. மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லே-அவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடுபுதூர், எல்லைத் தோட்டம், வஉசி காலனி, பி.கே.டி.நகர், அகிலாண் டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதிபுரம், பங்கஜா மில், தாமு நகர், பாலசுப்பிரமணியம் நகர், பாலகுரு கார்டன், சௌரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், பார்சன் அப்பார்ட்மென்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி சாலை(ஒரு பகுதி), நஞ்சுண்டாபுரம் சாலை மற்றும் திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

சமத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சமத்தூர், ஆவல்சின்னம்பாளையம், தளவாய்பாளையம், பாளையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பொள்ளாச்சியூர், பில்சினாம்பாளையம், ஜமின்கொட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சரி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

கோவில்பாளையம் துணை மின் நிலையத்திலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், குரும்பபாளையம், மண்ணிக்கம்பாளையம், அக்ரகார சாமகுளம், குன்னத்தூர், சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம், கல்லிபாளையம், மொண்டிகாலிபுதூர், கொண்டையம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

இந்த மின்தடை அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்கும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் இதனை கவனத்தில் கொண்டு தங்களது அன்றாட பணிகளை திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...