தொண்டாமுத்தூரில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல் மற்றும் சாலை அமைப்பு பணிகளுக்கு பூமி பூஜை

தொண்டாமுத்தூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. அதேநேரம், பல்வேறு சாலை அமைப்பு பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வுகளில் பொள்ளாச்சி எம்.பி. K.ஈஸ்வரசாமி மற்றும் திமுக மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்றனர்.


கோவை: தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், தொண்டாமுத்தூர் ஒன்றியத்தின் மருத்துவராயபுரம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலும் மாணவ மாணவிகளுக்கு இன்று விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.



இந்த நிகழ்வில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் K.ஈஸ்வரசாமியுடன் இணைந்து, கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி மிதிவண்டிகளை வழங்கினார்.



அதேநேரம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சிகளும் இன்று நடைபெற்றன.



முதலில், தாளியூர் பேரூர் கழகப் பகுதியில் ரூ.1 கோடி 55 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வார்டுகளில் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.



இந்த நிகழ்வை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் K.ஈஸ்வரசாமி மற்றும் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



இந்த நிகழ்வுகளில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்த சாலை அமைப்பு பணிகள் வார்டு எண் 02, 01, 10, 03, 06, 15 மற்றும் 09 ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த திட்டங்கள் அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...