திமுக பவள விழா: கோவையில் இல்லம் தோறும் கொடியேற்றும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்

திமுக பவள விழாவை முன்னிட்டு கோவையில் இல்லம் தோறும் திமுக கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தனது இல்லத்தில் கொடியேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.



கோவை: திமுக பவள விழாவை முன்னிட்டு கோவையில் இல்லம் தோறும் திமுக கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியின் துவக்க விழா பீளமேடு அண்ணாநகர் பகுதியில் உள்ள மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் இல்லத்தில் நடைபெற்றது.



நிகழ்ச்சியில் நா.கார்த்திக் திமுக கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், "திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, திமுக பவள விழாவை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்ட திமுக எல்லைக்கு உட்பட்ட அனைத்து இல்லங்கள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் திமுக கொடி ஏற்றும் விழா இன்று துவங்கியுள்ளது," என்றார்.

மேலும் அவர், "திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது வீடு, அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் திமுக கொடி ஏற்றப்பட்ட புகைப்படங்களை வரும் செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் கோவை மாநகர் மாவட்ட திமுக அலுவலகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். அதன்படி, மாநகர் மாவட்டம் முழுவதும் திமுக தொண்டர்கள் இன்று உற்சாகத்துடன் திமுகவின் இருவண்ண கொடி ஏற்றும் நிகழ்ச்சியை துவக்கியுள்ளனர்," என்று தெரிவித்தார்.

நா.கார்த்திக் மேலும் கூறுகையில், "அரசியல், பொருளாதாரம், சமூக நீதி ஆகியவற்றின் மேம்பாட்டுக்கு அரணாக நிற்கும் இந்த இயக்கத்தின் பவள விழா என்பது பெரும் மகிழ்ச்சிக்குரியது. பெண்களுக்கு சொத்துரிமை மட்டுமின்றி, 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதும் இந்த இயக்கம்தான். தமிழகத்தில், திராவிட மாடல் ஆட்சி மூலம், மக்களுக்கு எண்ணற்ற சேவையாற்றி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக வீடுகள் தோறும் திமுக கொடி ஏற்றும் நிகழ்ச்சி உற்சாகமாக நடந்து வருகிறது," என்று குறிப்பிட்டார்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...