திமுக பவள விழா: கோவையில் இல்லம் தோறும் கொடியேற்றும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்

திமுக பவள விழாவை முன்னிட்டு கோவையில் இல்லம் தோறும் திமுக கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தனது இல்லத்தில் கொடியேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.



கோவை: திமுக பவள விழாவை முன்னிட்டு கோவையில் இல்லம் தோறும் திமுக கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியின் துவக்க விழா பீளமேடு அண்ணாநகர் பகுதியில் உள்ள மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் இல்லத்தில் நடைபெற்றது.



நிகழ்ச்சியில் நா.கார்த்திக் திமுக கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், "திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, திமுக பவள விழாவை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்ட திமுக எல்லைக்கு உட்பட்ட அனைத்து இல்லங்கள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் திமுக கொடி ஏற்றும் விழா இன்று துவங்கியுள்ளது," என்றார்.

மேலும் அவர், "திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது வீடு, அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் திமுக கொடி ஏற்றப்பட்ட புகைப்படங்களை வரும் செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் கோவை மாநகர் மாவட்ட திமுக அலுவலகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். அதன்படி, மாநகர் மாவட்டம் முழுவதும் திமுக தொண்டர்கள் இன்று உற்சாகத்துடன் திமுகவின் இருவண்ண கொடி ஏற்றும் நிகழ்ச்சியை துவக்கியுள்ளனர்," என்று தெரிவித்தார்.

நா.கார்த்திக் மேலும் கூறுகையில், "அரசியல், பொருளாதாரம், சமூக நீதி ஆகியவற்றின் மேம்பாட்டுக்கு அரணாக நிற்கும் இந்த இயக்கத்தின் பவள விழா என்பது பெரும் மகிழ்ச்சிக்குரியது. பெண்களுக்கு சொத்துரிமை மட்டுமின்றி, 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதும் இந்த இயக்கம்தான். தமிழகத்தில், திராவிட மாடல் ஆட்சி மூலம், மக்களுக்கு எண்ணற்ற சேவையாற்றி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக வீடுகள் தோறும் திமுக கொடி ஏற்றும் நிகழ்ச்சி உற்சாகமாக நடந்து வருகிறது," என்று குறிப்பிட்டார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...