கோவையில் பர்னிச்சர் குடோனில் பயங்கர தீ விபத்து: ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

கோவை சின்னவேடம்பட்டியில் பர்னிச்சர் குடோனில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.



கோவை: கோவை மாவட்டம் சரவணம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னவேடம்பட்டி மினி பேருந்து சாலையில் உள்ள ஊர் கவுண்டர் தோட்டத்தில் இன்று நண்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மூக்கையா என்பவருக்கு சொந்தமான 'பாலாஜி ஃகுஸ்ஷன் ஒர்க்ஸ்' என்ற பர்னிச்சர் குடோனில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. குடோனுக்கு அருகில் செல்லும் தாழ்வழுத்த மின்கம்பி வடம் அதிக காற்றினால் ஒன்றுக்கொன்று உரசியதில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பொறி உருவாகியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிகிறது.



சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மூன்று தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பர்னிச்சர் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. மேலும், தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது.

இந்த சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...