கோவை கொடிசியாவில் ஹிப் ஹாப் இசை நிகழ்ச்சியின் போது மாணவர்களிடையே மோதல்

கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற ஹிப் ஹாப் தமிழா இசை நிகழ்ச்சியின் போது, போதையில் இருந்த கல்லூரி மாணவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் தலையிட்டு சம்பவத்தை கட்டுப்படுத்தினர்.



Coimbatore: கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஹிப் ஹாப் தமிழாவின் இசை நிகழ்ச்சியில் எதிர்பாராத சம்பவம் ஒன்று அரங்கேறியது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஹிப் ஹாப் தமிழா பாடல்களை பாடிக் கொண்டிருந்த போது, போதையில் இருந்த சில கல்லூரி மாணவர்களிடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கைகலப்பில் ஈடுபட்ட மாணவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.



இந்த சம்பவத்தின் போது அருகில் இருந்த சில பொதுமக்களுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், இந்த இசை நிகழ்ச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் குறைவாக இருந்ததாக கருத்து தெரிவித்துள்ளனர்.

பார்வையாளர்கள் சிலர் கருத்து தெரிவிக்கையில், இது போன்ற இசை நிகழ்ச்சிகளில் கல்லூரி மாணவர்கள் அதிகம் கூடுவதால் இது போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருவதாகவும், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் குறிப்பிடத்தக்க அம்சமாக, வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளை போல 300 அடி நீளமுள்ள ரேம்ப் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. ஹிப் ஹாப் தமிழா இந்த ரேம்பில் நடந்து வந்து பாடல்களை பாடி நடனமாடியது பார்வையாளர்களை கவர்ந்தது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...