கோவை கவுண்டம்பாளையம் புனித ஜான் போஸ்கோ ஆலயத்தில் அன்னை மரியாவின் பிறப்பு விழா கொண்டாட்டம்

கோவை கவுண்டம்பாளையம் புனித ஜான் போஸ்கோ ஆலயத்தில் அன்னை மரியாவின் பிறப்பு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் மாதா வேடங்களில் பவனி வந்தனர். "ஒளியின் விதை" கத்தோலிக்க மின்னிதழும் துவக்கப்பட்டது.


கோவை: கோவை மறைமாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புனித ஜான் போஸ்கோ ஆலயத்தில் அன்னை மரியாவின் பிறப்பு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஆலயத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலவிதமான மாதா வேடங்களில் அலங்காரம் செய்துகொண்டு பவனியாக வந்தனர். இத்துடன் மாதாவின் வேண்டுதல் தேர் பவனியும் நடைபெற்றது.



மேலும் "ஒளியின் விதை" என்ற கத்தோலிக்க மின்னிதழும் இன்று சிறப்பாக துவங்கி வைக்கப்பட்டது.

இவ்விழாவில், டான் போஸ்கோ எக்சல்லேன்ஸ் பள்ளியின் நிர்வாக இயக்குனர் அருட்தந்தை பெர்னான்டு மோசஸ் அவர்களும் புனித ஜான் போஸ்கோ ஆலயப் பங்குத்தந்தை ததேயு சைமன் கென்னடி அவர்களும் சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றினர்.



இவ்விழாவில் புனித ஜான் போஸ்கோ ஆலயத்தின் பங்கு மக்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...