கோவை கவுண்டம்பாளையம் புனித ஜான் போஸ்கோ ஆலயத்தில் அன்னை மரியாவின் பிறப்பு விழா கொண்டாட்டம்

கோவை கவுண்டம்பாளையம் புனித ஜான் போஸ்கோ ஆலயத்தில் அன்னை மரியாவின் பிறப்பு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் மாதா வேடங்களில் பவனி வந்தனர். "ஒளியின் விதை" கத்தோலிக்க மின்னிதழும் துவக்கப்பட்டது.


கோவை: கோவை மறைமாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புனித ஜான் போஸ்கோ ஆலயத்தில் அன்னை மரியாவின் பிறப்பு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஆலயத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலவிதமான மாதா வேடங்களில் அலங்காரம் செய்துகொண்டு பவனியாக வந்தனர். இத்துடன் மாதாவின் வேண்டுதல் தேர் பவனியும் நடைபெற்றது.



மேலும் "ஒளியின் விதை" என்ற கத்தோலிக்க மின்னிதழும் இன்று சிறப்பாக துவங்கி வைக்கப்பட்டது.

இவ்விழாவில், டான் போஸ்கோ எக்சல்லேன்ஸ் பள்ளியின் நிர்வாக இயக்குனர் அருட்தந்தை பெர்னான்டு மோசஸ் அவர்களும் புனித ஜான் போஸ்கோ ஆலயப் பங்குத்தந்தை ததேயு சைமன் கென்னடி அவர்களும் சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றினர்.



இவ்விழாவில் புனித ஜான் போஸ்கோ ஆலயத்தின் பங்கு மக்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...