கோவை அரசு போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்திய 'லிங்க் டிக்கெட்' வசதி

கோவை அரசு போக்குவரத்துக் கழகம் பயணிகளுக்காக 'லிங்க் டிக்கெட்' வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி மூலம் பயணிகள் முன்பதிவு செய்த பேருந்துகளுடன் நகர பேருந்துகளையும் இணைத்து பயணிக்க முடியும்.


கோவை: கோவை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பயணிகளின் வசதிக்காக 'லிங்க் டிக்கெட்' எனும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்துக் கழக கோட்ட மேலாண் இயக்குனர் ஸ்ரீதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில், கோவையில் காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் ஆகிய மூன்று இடங்களில் இருந்து தொலைதூர வழித்தடங்களில் முன்பதிவு வசதியுடன் கூடிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முன்பதிவு செய்யும் பயணிகளின் வசதிக்காக, 'லிங்க் டிக்கெட்' வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதியின் கீழ், பயணிகள் முன்பதிவு டிக்கெட் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.30 செலுத்தி, பேருந்து நிலையங்களில் இருந்து நகர பேருந்துகளில் வேறு இடங்களுக்குச் செல்லலாம். அதேபோல, வேறு இடங்களில் இருந்து இந்த மூன்று பேருந்து நிலையங்களுக்கும் செல்ல முடியும்.

இந்த 'லிங்க் டிக்கெட்' வசதியை காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் பேருந்து நிலையங்களில் இருந்து புறப்படும்போதோ அல்லது வந்திறங்கும்போதோ பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மண்டல நகர பேருந்துகளில் இந்த வசதியை பயணிகள் தங்கள் பயண நேரத்திற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு அல்லது பின்பு பயன்படுத்தலாம். முன்பதிவு பயணச்சீட்டை நகல் எடுத்தோ, செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்தோ, நடத்துனரிடம் காட்டி பயணிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது...

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...