கோவை: அரசூர், கல்லிமடை, கதிர்நாயக்கன்பாளையம் பகுதிகளில் நாளை மின்தடை

கோவை மாவட்டத்தில் அரசூர், கல்லிமடை, கதிர்நாயக்கன்பாளையம் துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்டம்பர் 6) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படும்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் அரசூர், கல்லிமடை, கதிர்நாயக்கன்பாளையம் ஆகிய மூன்று துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை (செப்டம்பர் 6) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசூர் துணைமின் நிலையத்தின் கீழ் உள்ள அரசூர், பொதியாம்பாளையம், வாகராயம்பாளையம், செல்லப்பம்பாளையத்தின் ஒரு பகுதி, குரும்பபாளையம், ராசிபாளையம், நீலம்பூர் பகுதி, ஊத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

கல்லிமடை துணைமின் நிலையத்தின் கீழ் உள்ள கல்லிமடை, பாலன் நகர், வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, சர்க்கரை செட்டியார் நகர், மசக்காளிபாளையம், காமராஜ் சாலை, உப்பிலிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

கதிர்நாயக்கன்பாளையம் துணைமின் நிலையத்தின் கீழ் உள்ள கதிர்நாயக்கன்பாளையம், குமாரபுரம், நாசிமநாயக்கன்பாளையம், பம்பாய் நகர், டீச்சர்ஸ் காலனி, கணேஷ்நகர், ஸ்ரீ ராம் நகர், தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

இந்த மின்தடை காரணமாக பாதிக்கப்படும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...