கோவை சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் முகாம்: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் வழங்கும் முகாம் தினசரி நடைபெறும் என்று ஆணையர் M சிவகுரு பிரபாகரன் அறிவித்துள்ளார். வியாபாரிகள் தேவையான ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் இன்று (செப்டம்பர் 4) வெளியிட்ட செய்திக்குறிப்பில், கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் முகாம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இந்த முகாம் கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் பின்வரும் வியாபாரிகள் கலந்து கொண்டு பயனடையலாம்:

1. ஏற்கனவே சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடனுக்கு விண்ணப்பித்து கடன் கிடைக்காத வியாபாரிகள்

2. முதல் மற்றும் இரண்டாம் தவணை கடன் பெற்று முறையாக திரும்ப செலுத்திய வியாபாரிகள்

கலந்து கொள்ளும் வியாபாரிகள் பின்வரும் ஆவணங்களை கொண்டு வர வேண்டும்:

1. சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை

2. ஆதார் அட்டை

3. வங்கி கணக்கு புத்தகம்

இந்த முகாமில் கலந்து கொண்டு அனைத்து சாலையோர வியாபாரிகளும் பயனடைய வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...