இறுதிச்சடங்கு கோலத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெண்கள்

கோவை தடாகம் சாலை வெங்கடாபுரம் பகுதியில் பட்டா வழங்கப்பட்ட பெண்கள், வீடு கட்ட முயற்சிக்கும்போது எதிர்ப்பு மற்றும் மிரட்டல்களை எதிர்கொண்டதாக கூறி, இறுதிச்சடங்கு கோலத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நண்பகல் சுமார் 12 மணியளவில் வித்தியாசமான காட்சி ஒன்று அரங்கேறியது. இறுதிச்சடங்கு கோலத்தில் சில பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

கோவை தடாகம் சாலை வெங்கடாபுரம் பகுதியில் உள்ள தெலுங்குபாளையத்தில் சுமார் 100 பேருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 2000ம் ஆண்டில் பட்டா ரத்து செய்யப்பட்ட சில நபர்கள் அங்கேயே தொடர்ந்து வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.



புதிதாக பட்டா பெற்றவர்கள் அங்கு வீடு கட்டி குடியேற முயற்சிக்கும் போது, ஏற்கனவே அங்கு வசிப்பவர்கள் இடையூறு விளைவிப்பதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம்சாட்டினர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பெண்கள் சிலர் இறுதிச்சடங்கில் அணியும் வெள்ளை ஆடையில், தலைக்கு மேல் துணியை பிடித்தவாறு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மேலும், இந்த பிரச்சனை குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டால், காவல்துறையில் புகார் அளிக்குமாறு கூறுவதாகவும், காவல்துறையில் புகார் அளிக்க சென்றால் சம்பந்தப்பட்ட அதிகாரியிடமே கூறுமாறு திருப்பி அனுப்புவதாகவும் பெண்கள் குற்றம் சாட்டினர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...