சூலூர் அருகே கார் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்பிலான கார்கள் எரிந்து நாசம்

கோவை சூலூர் அருகே உள்ள ஜெய் கிருஷ்ணா மாருதி ஷோரூமில் அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 10க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் எரிந்து நாசமாகின. தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



கோவை: கோவை சூலூர் அருகே உள்ள ஜெய் கிருஷ்ணா மாருதி ஷோரூம் அண்ட் சர்வீஸ் எனும் கார் விற்பனையகத்தில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.



இந்த தீ விபத்தில் 10க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமாகின.



தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும், அக்கம் பக்கத்தில் உள்ள நிறுவனங்களில் பணிபுரிவோர் முதல் கட்டமாக தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தீயணைப்பு படை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.



தீ விபத்தின் போது, கட்டிடத்தின் மேல் கூரை இடிந்து விழுந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த பத்துக்கு மேற்பட்ட கார்கள் தீயில் கருகி சேதமடைந்தன. சுமார் ஒரு மணி நேரம் கடுமையாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்திற்குப் பிறகு, ஷோரூமுக்குள் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட கார்களை ஊழியர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். இந்த தீ விபத்து குறித்து போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...