கோவை அரசு பேருந்தில் பயணிகள் அமரும் இடத்தில் விரிசல்: அதிகாரிகள் பணிநீக்கம்

கோவையில் அரசு பேருந்தில் பயணிகள் அமரும் இடத்தில் விரிசல் ஏற்பட்டு சக்கரம் தெரிந்ததால் பரபரப்பு. வீடியோ வைரலானதை அடுத்து இரண்டு அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் முதல் குரும்பபாளையம் வரை இயக்கப்படும் 110 எண் கொண்ட அரசு பேருந்தில் பயணிகள் அமரும் இடத்தில் பலகை விரிசல் ஏற்பட்டு சக்கரம் தெரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்பவர் இந்த பேருந்தில் பயணித்துள்ளார். அவர் பேருந்தில் ஏறி சக்கரத்தின் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்தபோது, பலகையில் விரிசல் ஏற்பட்டு பேருந்தின் சக்கரங்கள் தெரிந்துள்ளன. இது குறித்து நடத்துனரிடம் கேள்வி எழுப்பியபோது, முறையான பதில் கிடைக்காததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.



இந்த சம்பவத்தை விஷ்ணு வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். வீடியோ வைரலான நிலையில், கோவை கோட்ட பொதுமேலாளர் உத்தரவின் பேரில் ஒண்டிப்புதூர் கிளை மேலாளர் மணிவண்ணன் மற்றும் உதவி பொறியாளர் சீனிவாசன் ஆகிய இருவரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பேருந்துகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. பொதுப் போக்குவரத்து துறை அதிகாரிகள் பேருந்துகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...