கோவை: இந்து அதிரடிப்படை தலைவர் ராஜகுருவுக்கு ஜாமீன் - சிறையிலிருந்து விடுதலை

கோவையில் 2015ல் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக சிறை தண்டனை பெற்ற இந்து அதிரடிப்படை தலைவர் ராஜகுரு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனில் விடுதலையானார்.


Coimbatore: கோவை மத்திய சிறையில் இருந்து இன்று காலை இந்து அதிரடிப்படை நிறுவனத் தலைவர் ராஜகுரு விடுதலை செய்யப்பட்டார். 2015 ஆம் ஆண்டு இந்து இயக்கங்கள் சார்பில் கோவை ராஜ வீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதற்காக Variety Hall Road காவல்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ராஜகுருவுக்கு 2024 ஆம் ஆண்டு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.



சிறையிலிருந்து வெளியே வந்த ராஜகுருவை இந்து மக்கள் புரட்சி படை நிறுவனத் தலைவர் பீமா பாண்டி மற்றும் லோட்டஸ் மணிகண்டன் நிறுவனத் தலைவர் ஆகியோர் வரவேற்றனர். மேலும், ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பாகவும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் கோவையில் உள்ள இந்து அமைப்புகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ராஜகுருவின் விடுதலை குறித்து பல்வேறு இந்து அமைப்புகளின் தலைவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...