துடியலூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய வட மாநில வாலிபர் கைது

கோவை துடியலூர் பகுதியில் இரண்டு நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்தி, போக்குவரத்துக்கு இடையூறு செய்த வட மாநில வாலிபர் பொதுமக்கள் உதவியுடன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


Coimbatore: கோவை துடியலூர் வெள்ளகிணறு பிரிவு பகுதியில் மேட்டுப்பாளையம் மெயின் சாலையில் கடந்த இரண்டு நாட்களாக வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வாலிபர் அங்குள்ள செல்போன் டவர் மீது ஏறி நின்றும், மெயின் ரோட்டில் நடந்து செல்பவர்களை அச்சுறுத்தியும், போக்குவரத்துக்கு இடையூறு செய்து வந்தார். மேலும், அந்த பகுதியில் உள்ள கடைகள் முன்புறம் தள்ளுவண்டி கடைகளில் வண்டிகளை தள்ளியும், பானைகளை உடைத்தும் அச்சுறுத்தலில் ஈடுபட்டார்.

இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 1) பொதுமக்களின் உதவியுடன் துடியலூர் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவரை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள மனநல மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் துடியலூர் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. போலீசாரின் துரித நடவடிக்கையால் பிரச்சினை தீர்க்கப்பட்டது பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...