துடியலூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய வட மாநில வாலிபர் கைது

கோவை துடியலூர் பகுதியில் இரண்டு நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்தி, போக்குவரத்துக்கு இடையூறு செய்த வட மாநில வாலிபர் பொதுமக்கள் உதவியுடன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


Coimbatore: கோவை துடியலூர் வெள்ளகிணறு பிரிவு பகுதியில் மேட்டுப்பாளையம் மெயின் சாலையில் கடந்த இரண்டு நாட்களாக வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வாலிபர் அங்குள்ள செல்போன் டவர் மீது ஏறி நின்றும், மெயின் ரோட்டில் நடந்து செல்பவர்களை அச்சுறுத்தியும், போக்குவரத்துக்கு இடையூறு செய்து வந்தார். மேலும், அந்த பகுதியில் உள்ள கடைகள் முன்புறம் தள்ளுவண்டி கடைகளில் வண்டிகளை தள்ளியும், பானைகளை உடைத்தும் அச்சுறுத்தலில் ஈடுபட்டார்.

இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 1) பொதுமக்களின் உதவியுடன் துடியலூர் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவரை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள மனநல மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் துடியலூர் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. போலீசாரின் துரித நடவடிக்கையால் பிரச்சினை தீர்க்கப்பட்டது பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...