உடுமலை அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்த எம்பி ஈஸ்வரசாமி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சரக்கு வாகன விபத்தில் 19 பேர் காயமடைந்த நிலையில், பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி அவர்களை உடுமலை அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வாளவாடி செல்லும் வழியில் சரக்கு வாகனம் தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் தற்போது உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி உடுமலை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறி, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

எம்பி ஈஸ்வரசாமியுடன், ஒன்றிய நகர செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரும் மருத்துவமனைக்கு வருகை தந்தனர். இந்த சந்திப்பின் போது, காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும் எம்பி ஆறுதல் கூறினார்.

விபத்து குறித்த விசாரணை நடந்து வருவதாகவும், காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இது போன்ற விபத்துக்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...