உடுமலை அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்த எம்பி ஈஸ்வரசாமி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சரக்கு வாகன விபத்தில் 19 பேர் காயமடைந்த நிலையில், பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி அவர்களை உடுமலை அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வாளவாடி செல்லும் வழியில் சரக்கு வாகனம் தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் தற்போது உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி உடுமலை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறி, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

எம்பி ஈஸ்வரசாமியுடன், ஒன்றிய நகர செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரும் மருத்துவமனைக்கு வருகை தந்தனர். இந்த சந்திப்பின் போது, காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும் எம்பி ஆறுதல் கூறினார்.

விபத்து குறித்த விசாரணை நடந்து வருவதாகவும், காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இது போன்ற விபத்துக்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.

Newsletter

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...