கோவையில் மாணவர்களுக்கான இலக்கியப் போட்டிகள்: தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஏற்பாடு

கோவையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி இணைந்து மாணவர்களுக்கான கவிதை, பேச்சு, ஓவியம் மற்றும் ஒராள் நாடகப் போட்டிகளை நடத்தின. பல்வேறு கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



கோவை: கோவையில் மாணவ, மாணவிகளின் இலக்கியத் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் கவிதை, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறையும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.



இந்த நிகழ்வில் கவிதை, ஓவியம், பேச்சு ஆகிய போட்டிகளுடன், மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஒராள் நாடகமும் நடத்தப்பட்டது. கவிதைப் போட்டியில் "மெல்லத்தமிழ் இனி?", "இன்ஸ்டா அடிமைகள்", "இயற்கை பேரிடர்கள் படிப்பினை என்ன?", "சமத்துவமும் சமூக நீதியும்" போன்ற தலைப்புகள் வழங்கப்பட்டன.

பேச்சுப் போட்டியில் "பழங்குடி மனித குலத்தின் மூத்த குடி", "நம் கல்வி நம் உரிமை எல்லோரும் சமம்தானே டீச்சர்" போன்ற தலைப்புகள் இடம்பெற்றன.



தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரஃபி இந்தப் போட்டிகளைத் துவக்கி வைத்தார்.

பல்வேறு கல்லூரிகளில் இருந்து வந்த மாணவ, மாணவிகள் தனித்தனி அரங்குகளில் நடைபெற்ற போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



குறிப்பாக ஒராள் நாடகப் பிரிவில், மாணவர்கள் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றை தத்ரூப நாடகங்களாக நடித்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.

இந்த இலக்கியப் போட்டிகள் இளம் தலைமுறை மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணர்வதோடு, சமூக விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...