கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: கோவையில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி கோரி கோவையில் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தினர்.



கோவை: கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்தும், உயிரிழந்த மருத்துவருக்கு நீதி கேட்டும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாடு முழுவதும் மருத்துவர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக, கோவையில் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஊழியர் சங்க கோவைக் கோட்ட மகளிர் துணைக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும், பணியிடங்களில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வலியுறுத்தியும் இவர்கள் கோவை திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



போராட்டத்தின் போது, பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பினை உத்திரவாதப்படுத்திடவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்திடவும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கோரிக்கைகள் முழங்கப்பட்டன.



இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...