கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: கோவையில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி கோரி கோவையில் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தினர்.



கோவை: கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்தும், உயிரிழந்த மருத்துவருக்கு நீதி கேட்டும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாடு முழுவதும் மருத்துவர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக, கோவையில் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஊழியர் சங்க கோவைக் கோட்ட மகளிர் துணைக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும், பணியிடங்களில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வலியுறுத்தியும் இவர்கள் கோவை திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



போராட்டத்தின் போது, பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பினை உத்திரவாதப்படுத்திடவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்திடவும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கோரிக்கைகள் முழங்கப்பட்டன.



இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது...

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...