தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி காவல் ஆணையரிடம் மனு

திருப்பூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி, கட்சி நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். அதிகாரிகள் தங்களை அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டினர்.



Coimbatore: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி தராமல் தங்களை அலைக்கழிப்பதாக கூறி, அக்கட்சியின் நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, உரிய அனுமதி பெற்று கட்சிக் கொடியை பறக்க விடுமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், திருப்பூர் பகுதிகளில் கொடிக்கம்பம் அமைத்து கட்சிக் கொடியினை ஏற்றிட காவல்துறையினர் தடை விதிப்பதாக கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.



மேலும், அனுமதி பெற மாநகராட்சி நிர்வாகத்தை அணுகினால் காவல்துறையிடம் அனுமதி பெறுமாறு அனுப்பி விடுவதாகவும், காவல்துறையினரிடம் அணுகினால் மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும் என கூறி தங்களை அலைக்கழிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த கோரிக்கை தொடர்பாக, மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு அளிக்க முடிவெடுத்ததாக கூறிய அவர்கள், முதல் கட்டமாக மாநகர காவல் ஆணையாளரிடம் மனு அளித்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியான குதுப்தீன், இது தொடர்பாக அளித்த பேட்டியில், தங்களது கட்சிக்கு உரிய அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும், அதிகாரிகளின் அலைக்கழிப்பு நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...