கோவையில் தோல் தான விழிப்புணர்வு குறும்படத்திற்கான பூஜை நிகழ்வு

கோவையில் தோல் தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 'தேன்மொழி' என்ற குறும்படத்திற்கான பூஜை நிகழ்வு நடைபெற்றது. அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம், ரோட்டரி 3201, கங்கா மருத்துவமனை மற்றும் வோல்ட் மலையாளி கவுன்சில் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.


கோவை: கோவை பந்தைய சாலையில் உள்ள ரோட்டரி 3201 அலுவலகத்தில் தோல் தான விழிப்புணர்வு குறித்த 'தேன்மொழி' குறும்பட பூஜை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வை மூத்த வழக்கறிஞர் சுந்தர வடிவேல் துவக்கி வைத்தார்.

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனத் தலைவர் ஆர்.கே.குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைப்பின் பொதுச் செயலாளர் வி.எச்.சுப்பிரமணியம், மாநில மகளிரணி தலைவி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் லதா அர்ஜூனன், மாவட்டத் தலைவர் ரமேஷ்குமார், மாவட்டத் துணைத் தலைவர் செந்தில் குமார், வோல்ட் மலையாளி கவுன்சில் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



குறும்படத்தின் இயக்குனர் குமார் தங்கவேல், நடிகை சிவசக்தி, குழந்தை நட்சத்திரம் பேபி ரக்சிதா ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

'தேன்மொழி' குறும்படம், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் கதையைச் சித்தரிக்கிறது. தனது அழகை இழந்த குழந்தைக்கு, கங்கா மருத்துவமனையின் தோல் தான மையம் எவ்வாறு உதவி புரிகிறது என்பதை இக்குறும்படம் விளக்குகிறது. மேலும், தோல் தானத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறது.

ரோட்டரி 3201 ஆளுநர் சுந்தரவடிவேல் கூறுகையில், "இக்குறும்படத்தின் மூலம் கங்கா தோல் தான மையத்தை எவ்வாறு அணுக வேண்டும் என்பதையும், ரோட்டரி 3201, அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம், வோல்டு மலையாளி கவுன்சில் ஆகியவை எவ்வாறு உதவுகின்றன என்பதையும் தெளிவாக எடுத்துரைக்க உள்ளோம்," என்றார்.

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் பொதுச் செயலாளர் வி.எச்.சுப்பிரமணியம், "தோல் தான விழிப்புணர்வு குறித்து பொதுமக்களிடம் போதிய அறிவு இல்லை. இக்குறும்படத்தின் மூலம் தோல் தானத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க உள்ளோம்," என்று தெரிவித்தார்.

மாநில மகளிரணி தலைவி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் லதா அர்ஜூனன் கூறுகையில், "தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு உண்டு என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த 'தேன்மொழி' குறும்படம் எடுக்கப்பட உள்ளது," என்றார்.

இக்குறும்படம் மூலம் தோல் தான விழிப்புணர்வை பரவலாக ஏற்படுத்தி, கங்கா மருத்துவமனை நடத்தி வரும் தோல் சேமிப்பு மையத்திற்கு உதவ முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...

Elderly Woman Killed in Truck Collision near Velandipalayam in Coimbatore

A 70-year-old woman was killed after the scooter she was travelling on with her daughter was hit by a heavy truck on Tha...

Break-In: 100 Kg of Silver Stolen from House in Coimbatore’s Oppanakara Street

A major burglary has been reported at the residence of an auditor on Oppanakara Street in Coimbatore, where unidentified...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 7-ல் டாப்செட்கோ கடன் மேளா

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் கடன் மேளா செப்டம்பர் 7-ல் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற...

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...