கோவையில் தோல் தான விழிப்புணர்வு குறும்படத்திற்கான பூஜை நிகழ்வு

கோவையில் தோல் தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 'தேன்மொழி' என்ற குறும்படத்திற்கான பூஜை நிகழ்வு நடைபெற்றது. அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம், ரோட்டரி 3201, கங்கா மருத்துவமனை மற்றும் வோல்ட் மலையாளி கவுன்சில் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.


கோவை: கோவை பந்தைய சாலையில் உள்ள ரோட்டரி 3201 அலுவலகத்தில் தோல் தான விழிப்புணர்வு குறித்த 'தேன்மொழி' குறும்பட பூஜை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வை மூத்த வழக்கறிஞர் சுந்தர வடிவேல் துவக்கி வைத்தார்.

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனத் தலைவர் ஆர்.கே.குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைப்பின் பொதுச் செயலாளர் வி.எச்.சுப்பிரமணியம், மாநில மகளிரணி தலைவி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் லதா அர்ஜூனன், மாவட்டத் தலைவர் ரமேஷ்குமார், மாவட்டத் துணைத் தலைவர் செந்தில் குமார், வோல்ட் மலையாளி கவுன்சில் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



குறும்படத்தின் இயக்குனர் குமார் தங்கவேல், நடிகை சிவசக்தி, குழந்தை நட்சத்திரம் பேபி ரக்சிதா ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

'தேன்மொழி' குறும்படம், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் கதையைச் சித்தரிக்கிறது. தனது அழகை இழந்த குழந்தைக்கு, கங்கா மருத்துவமனையின் தோல் தான மையம் எவ்வாறு உதவி புரிகிறது என்பதை இக்குறும்படம் விளக்குகிறது. மேலும், தோல் தானத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறது.

ரோட்டரி 3201 ஆளுநர் சுந்தரவடிவேல் கூறுகையில், "இக்குறும்படத்தின் மூலம் கங்கா தோல் தான மையத்தை எவ்வாறு அணுக வேண்டும் என்பதையும், ரோட்டரி 3201, அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம், வோல்டு மலையாளி கவுன்சில் ஆகியவை எவ்வாறு உதவுகின்றன என்பதையும் தெளிவாக எடுத்துரைக்க உள்ளோம்," என்றார்.

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் பொதுச் செயலாளர் வி.எச்.சுப்பிரமணியம், "தோல் தான விழிப்புணர்வு குறித்து பொதுமக்களிடம் போதிய அறிவு இல்லை. இக்குறும்படத்தின் மூலம் தோல் தானத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க உள்ளோம்," என்று தெரிவித்தார்.

மாநில மகளிரணி தலைவி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் லதா அர்ஜூனன் கூறுகையில், "தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு உண்டு என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த 'தேன்மொழி' குறும்படம் எடுக்கப்பட உள்ளது," என்றார்.

இக்குறும்படம் மூலம் தோல் தான விழிப்புணர்வை பரவலாக ஏற்படுத்தி, கங்கா மருத்துவமனை நடத்தி வரும் தோல் சேமிப்பு மையத்திற்கு உதவ முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...