தாராபுரம் அருகே ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மூலனூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய வளர்ச்சிப் பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார். சாலைப் பணிகள், அலுவலகக் கட்டிடம், நியாய விலைக் கடை உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் இதில் அடங்கும்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார். அதேசமயம், முடிவுற்ற பணிகளையும் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

மூலனூர் ஊராட்சி ஒன்றியம் தூரம்பாடி ஊராட்சி குழந்தை கவுண்டன் வலசு பகுதியில் புதிய தார் சாலை அமைத்தல், நத்தப்பாளையத்தில் ஊராட்சி அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை ஆகியவை இந்த நிகழ்வில் நடைபெற்றன.



எரசனம்பாளையம், உத்தம கவுண்டம்பாளையம் பகுதியில் பழைய தார் சாலையை புதிய தார் சாலையாக புதுப்பிக்கும் பணியையும், அதே பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய நியாய விலைக் கடையையும் அமைச்சர் திறந்து வைத்தார். மேலும், குமாரபாளையம் ஊராட்சி ராமபட்டணம் சாலை புதுப்பித்தல், ராசிபாளையம் சாலை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளும் தொடங்கப்பட்டன.



இந்த நிகழ்ச்சியில் திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவருமான இல. பத்மநாபன், மாநில விளையாட்டு மேம்பாட்டுத்துறை துணைச் செயலாளர் கார்த்தி, மூலனூர் ஒன்றிய செயலாளர் துரை தமிழரசு மற்றும் பழனிச்சாமி, மூலனூர் பேரூர் கழகச் செயலாளர் மக்கள் தண்டபாணி, கன்னிவாடி பேரூராட்சி செயலாளர் சுரேஷ், தூரம்பாடி திமுக செயலாளர் மோகன்ராஜ், குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செல்லமுத்து உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...