உடுமலை வாகன ஓட்டுநர்கள் வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கு ரூ.40,886 நிதியுதவி

உடுமலையில் வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கேரளா வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கு ரூ.40,886 நிதியுதவி வழங்கினர். மூன்று வாட்ஸ்அப் குழுக்கள் இணைந்து இந்த உதவியை செய்தனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சார்பில் கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

உடுமலையில் உள்ள ஸ்டார் டிரான்ஸ்போர்ட் வாட்ஸ்அப் குழு, TN 78 வாட்ஸ்அப் குழு, கே.எஸ்.டி வாட்ஸ்அப் குழு ஆகிய மூன்று குழுக்கள் இணைந்து இந்த நிதி உதவியை வழங்கியுள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கை வாட்ஸ்அப் குழுக்களில் எழுப்பப்பட்டது.



இதனையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சார்பில் மொத்தம் ரூ.40,886 நிதி திரட்டப்பட்டது. இந்தத் தொகை கேரளா மாநில முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு உடுமலை பாரத ஸ்டேட் வங்கி மூலம் அனுப்பப்பட்டுள்ளது.



வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவரும் நிதி உதவி அளிக்க முன்வர வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த உதவி மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓரளவு ஆறுதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...