கோவை மாவட்டத்தில் நலத்திட்டப் பணிகளை ஆய்வு செய்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக்குழு

கோவை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நலத்திட்டப் பணிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் ஆய்வு செய்கிறது. செம்மொழி பூங்கா, காவலர் குடியிருப்பு, மருத்துவமனை உபகரணங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.



கோவை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவரும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தலைமையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் நலத்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதி மொழிக் குழுவினர், கோவை காந்திபுரத்தில் உள்ள செம்மொழி பூங்கா கட்டும் பணிகளை முதலில் ஆய்வு செய்தனர்.



ஆய்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் செம்மொழி பூங்கா திட்டங்கள் குறித்து குழுவுக்கு விளக்கம் அளித்தனர்.





தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதி மொழிக்குழு தலைவர் வேல்முருகன் கூறுகையில், "தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்படுகின்ற மக்களுக்கான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படுவது குறித்து ஆய்வு செய்வதற்காக, தமிழ்நாடு சட்டப்பேரவையின் செயலாளர் மற்றும் இணைச் செயலாளர், துணைச் செயலாளர் ஆகியோரோடு இந்த ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டுள்ளோம். கோவையில் செம்மொழிப் பூங்காவிற்கான பணிகள் தொடங்கப்பட்டிருப்பது குறித்து, குழு நேரடியாக கலாய்வு செய்ய வந்தது. கோவை மாநகராட்சி ஆணையரும் தலைமை பொறியாளரும் இந்த பணிகள் நடைபெறுவது குறித்து வரைபடங்களோடு குழுவுக்கு விளக்கம் அளித்திருக்கிறார்கள்." என்றார்.

"125 ஏக்கரில் இந்த பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. தற்போது சிறைச்சாலை இருக்கின்ற காரணத்தினால், மாவட்ட ஆட்சித் தலைவர் சிறைச்சாலையை மாற்றம் செய்த பிறகு முழுவதுமான 125 ஏக்கர் இந்த பணிகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. தற்போது 45 ஏக்கர் நிலப்பரப்பில் 167 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது." என்றார்.

"2021 ஆம் ஆண்டு செம்மொழிப் பூங்காவிற்கான உறுதிமொழி அளிக்கப்பட்டது.(உறுதிமொழி எண் 173/2021) தமிழக முதலமைச்சர் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றுகின்ற வகையில் செம்மொழி பூங்காவிற்கான பணி நடைபெற்று வருகிறது என்பதை குழு உறுதி செய்திருக்கிறது. அவ்வப்போது நடைபெறும் பணிகளை துறை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், மூத்த அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். தற்போது 45 ஏக்கரில் நடைபெற்று வரும் பூங்காவிற்கான பணிகள் மே 25ஆம் தேதிக்குள் முடிப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி ஆணையர், தலைமை பொறியாளர் முடிவு செய்துள்ளனர்." என்றார்

அவர் மேலும் கூறுகையில், அடுத்ததாக 54 கோடி ரூபாய் செலவில் காவலர்களுக்கான குடியிருப்பு கட்டும் பணியை மாநகராட்சி காவல் ஆணையருடன் பார்வையிட உள்ளோம். அரசு மருத்துவக் கல்லூரியில் 2.45 கோடியில் நீராவிய இயந்திரம் நிறுவப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்ய உள்ளோம். 250 கோடி ரூபாய் செலவில் மேற்கு புறவழிச் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதா குழு ஆய்வு செய்ய உள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி கூடத்தின் மறுசீரமைப்புக்கு 6 கோடியே 80 லட்சம் அரசு கொடுத்துள்ளது அந்த பணிகள் தொடங்கப்பட்டு முறையாக நடைபெற்று வருகிறதா என்பதை மாவட்ட ஆட்சித் தலைவருடன் ஆய்வு செய்ய உள்ளோம். மருதமலையில் 5.20 கோடி ரூபாய் செலவில் ரோப்கார் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதா என்பதை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர் ஆகியோரோடு கள ஆய்வு செய்ய உள்ளோம்." என்றார்.

"கோவை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுதி மொழிகள் 2002ல் இருந்து நிலுவையில் உள்ளது. ஏன் அது இன்னும் நிலுவையில் உள்ளது? ஏன் அதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை? அது குறித்து அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குவதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தி ஆய்வு செய்ய உள்ளோம்." என்று அவர் கூறினார்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...