கோவையில் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் கைது

கோவை கடைவீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.


Coimbatore: கோவை கடைவீதி காவல் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வரும் ரங்கராஜ், நேற்று (ஆகஸ்ட் 18) வைசியாள் வீதி – ஒப்பணக்கார வீதி சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்குள்ள துணிக்கடைகள் முன் நின்று கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்துக் கொண்டிருந்த ஒரு கும்பலை அவர் கண்டித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், போலீஸ்காரர் ரங்கராஜை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து ரங்கராஜ் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். அதன் அடிப்படையில், போலீஸ்காரரிடம் தகராறு செய்ததாக கரும்பு கடை சேரன் நகரைச் சேர்ந்த ஹக்கீம் (வயது 37), சர்புதீன் (வயது 35), சுண்டக்காமுத்தூர் ஹரிரவேந்தரா (வயது 21), உக்கடம் பிலால் எஸ்டேட் அன்சர் (வயது 28), செல்வபுரம் ஆதிபதி (வயது 24), கரும்புக்கடை சாரமேடு முகமது அஜ்மல் உசைன் (வயது 34) ஆகிய 6 பேரை கைது செய்தார்.

கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாது தடுத்தல், தகாத வார்த்தைகளால் பேசுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...