பீளமேடு காவல் நிலையத்தில் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் - காவலர்களுக்கு ராக்கி அணிவித்த மாணவர்கள்

கோவை பீளமேடு காவல் நிலையத்தில் ரொட்டராக்ட் கிளப் ஆப் கோயம்புத்தூர் டெக்சிட்டி மாணவர்கள் காவலர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடினர். காவலர்களுக்கு ராக்கி அணிவித்து, இனிப்புகள் வழங்கி மரியாதை செலுத்தினர்.


கோவை: கோவை மாவட்டம் E2- பீளமேடு காவல் நிலையத்தில் இன்று ரக்ஷா பந்தன் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. ரொட்டராக்ட் கிளப் ஆப் கோயம்புத்தூர் டெக்சிட்டி தன்னார்வ மாணவர்கள் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுடன் இந்த திருநாளை கொண்டாடினர்.



நாட்டின் பாதுகாப்பிற்காக அயராது உழைக்கும் காவலர்களுக்கு தங்களது ஆதரவையும், அன்பையும், மரியாதையையும், நன்றியையும் தெரிவிக்கும் விதமாக காவல்துறை அதிகாரிகளுக்கு மாணவ சகோதரிகள் ராக்கிகளை கட்டினர்.



மேலும், காவலர்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்து, இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



இந்நிகழ்வு அனைவருக்கும் நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் அளித்ததோடு, சகோதர சகோதரிகளுக்கு இடையேயான பாசத்தையும் நம்பிக்கையையும் வலுப்படுத்தியது. காவல்துறையின் அர்ப்பணிப்பான சேவைக்கு சமூகத்தின் நன்றியை தெரிவிக்கும் தருணமாகவும், மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையேயான உறவை மேம்படுத்தும் முயற்சியாகவும் இந்நிகழ்வு அமைந்தது.



நிகழ்ச்சியின் போது, சமுதாயத்தில் இளைஞர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை காவல்துறையினர் எடுத்துரைத்தனர். நாட்டிற்காக அயராது உழைக்கும் காவலர்களுடன் இந்த சகோதரத்துவ தினத்தை கொண்டாடியது பெரு மகிழ்ச்சி அளிப்பதாக டெக்சிட்டி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பீளமேடு காவல்துறை அதிகாரிகள், ரோட்டராக்ட் கிளப் ஆஃப் டெக்சிட்டியின் தலைவர் ஜெய்சீலன்.ப, செயலாளர் ருத்ரா.ம, நிகழ்வு தலைவர் கல்பனா.ஜெ, உறுப்பினர்கள் பிரபஞ்சனி.ம மற்றும் சஞ்சய் பிராணவ்.ஜெ ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...