கோவை மாநகர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு குறித்து பாராட்டு

கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு குறித்து முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கலைஞரின் சாதனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.


Coimbatore: கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 19) கோவை மாநகர் மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ தலைமை வகித்தார்.

கூட்டத்தில் மாநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், தளபதி இளங்கோ, கல்பனா செந்தில், மாநகர் மாவட்ட பொருளாளர் எஸ்எம்பி. முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை மாநகராட்சி மேயர் இரா.ரங்கநாயகி, கழக சொத்துப் பாதுகாப்புக் குழு துணைத் தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சாதனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அவரது 60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் பல்வேறு பொறுப்புகளை வகித்து சிறப்பாக செயல்பட்டதை நினைவு கூர்ந்தனர்.

கலைஞரின் முக்கிய சாதனைகளான கைரிக்சா ஒழிப்பு, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, உள்ளாட்சியில் 50% இட ஒதுக்கீடு, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து, மகளிர் சுய உதவிக் குழுக்கள், கண்ணொளித் திட்டம், பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டம் போன்றவற்றை பாராட்டி பேசினர்.



கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் M.K. Stalin அவர்களின் முயற்சியால் ஒன்றிய அரசு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிட்டதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதற்காக முதலமைச்சருக்கு கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...