கோவை மாநகர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு குறித்து பாராட்டு

கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு குறித்து முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கலைஞரின் சாதனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.


Coimbatore: கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 19) கோவை மாநகர் மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ தலைமை வகித்தார்.

கூட்டத்தில் மாநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், தளபதி இளங்கோ, கல்பனா செந்தில், மாநகர் மாவட்ட பொருளாளர் எஸ்எம்பி. முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை மாநகராட்சி மேயர் இரா.ரங்கநாயகி, கழக சொத்துப் பாதுகாப்புக் குழு துணைத் தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சாதனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அவரது 60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் பல்வேறு பொறுப்புகளை வகித்து சிறப்பாக செயல்பட்டதை நினைவு கூர்ந்தனர்.

கலைஞரின் முக்கிய சாதனைகளான கைரிக்சா ஒழிப்பு, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, உள்ளாட்சியில் 50% இட ஒதுக்கீடு, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து, மகளிர் சுய உதவிக் குழுக்கள், கண்ணொளித் திட்டம், பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டம் போன்றவற்றை பாராட்டி பேசினர்.



கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் M.K. Stalin அவர்களின் முயற்சியால் ஒன்றிய அரசு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிட்டதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதற்காக முதலமைச்சருக்கு கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...