உடுமலை அருகே சைனிக் ராணுவ பயிற்சி பள்ளியில் 78வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி நகரில் உள்ள சைனிக் ராணுவ பயிற்சி பள்ளியில் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் கேப்டன் மணிகண்டன் தேசிய கொடியேற்றினார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி நகரில் மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் சைனிக் ராணுவ பயிற்சி பள்ளியில் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

விழாவின் தொடக்கமாக, பள்ளி முதல்வர் கேப்டன் மணிகண்டன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.



அதைத் தொடர்ந்து அனைத்து ஊழியர்களும் மாணவர்களும் தேசிய கீதத்தை பாடினர்.





கொடியேற்றத்துக்குப் பின் பள்ளியின் நினைவுச் சின்னமான அமர் சக்ராவிற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் தீப்தி உபாத்யாய மலர் அஞ்சலி செலுத்தினர்.



பின்னர் பள்ளி மாணவ மாணவிகள் கண்கவர் நடன நிகழ்ச்சி நடத்தினர்.

விழாவின் அடுத்த கட்டமாக, 8, 9ம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் "இந்தியா 78" மற்றும் "உலக அரங்கில் இந்தியா" என்ற தலைப்புகளில் உரையாற்றினர். பள்ளியின் பாடல் குழு தேசபக்தி பாடல்களை இசைத்து பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தனர். 9, 11ஆம் வகுப்பு மாணவர்கள் சுதந்திரத்தைப் பற்றிய உரை நாடகம் நிகழ்த்தி அனைவரையும் கவர்ந்தனர்.

7, 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்தி மொழியில் கவிதை வாசித்து தங்களது தேசபக்தியை வெளிப்படுத்தினர். ராணி என்பவர் தனது உரையில் சுதந்திரப் போராட்ட வீரர்களையும் விடுதலைப் போராட்டத்தையும் நினைவு கூர்ந்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில் தலைமை ஆசிரியர் உரையாற்றினார். அவர் தனது உரையில் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய மாபெரும் தலைவர்களின் தியாகம் மற்றும் தன்னலமற்ற முயற்சிகளை நினைவு கூர்ந்தார். மேலும், பொருளாதார வளர்ச்சி, அறிவியல், விவசாயம், மருத்துவம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் இந்தியாவின் வேகமான வளர்ச்சியை அவர் வலியுறுத்தினார்.

மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் 12 முக்கிய பண்புகளை புரிந்து கொண்டு உள்வாங்கி, முற்போக்கான தேசத்தை நோக்கி உழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இவ்வாறு சைனிக் ராணுவ பயிற்சி பள்ளியில் 78வது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...