உடுமலை அருகே பெரிய கோட்டை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - பொள்ளாச்சி எம்.பி. பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பெரிய கோட்டை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி முகாமை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கினார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெரிய கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் இன்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி துவக்கி வைத்தார். அதன் பின்னர், முகாமில் உடனடியாக தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், உடுமலை ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமிமுருகன், பெரியகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் பாலசுப்பிரமணியம், உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ், உடுமலை நகராட்சி முன்னாள் தலைவர் வேலுச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



முகாம் தொடங்குவதற்கு முன், பெரிய கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வருவாய்த்துறை, காவல்துறை, மருத்துவத்துறை, மின்சார துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டன. இந்த அரங்குகளில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை விண்ணப்பங்களாக அளித்தனர்.

பொதுமக்கள் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்தனர். அதன் பிறகு, மனுக்களின் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளின் அரங்குகளில் மனுக்களை அளிக்க அறிவுறுத்தப்பட்டது.

இந்த முகாம் நடைபெறுவது குறித்த தகவல் ஊராட்சி முழுவதும் பரவலாக அறிவிக்கப்பட்டது. ஊராட்சி மன்ற நிர்வாகம் தரப்பில் துண்டு பிரசுரங்கள் மூலமாக இல்லம் தோறும் தகவல் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் முகாமிற்கு வருகை தந்து தங்கள் மனுக்களை அளித்தனர்.

இந்த முகாமின் மூலம் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் குறைகள் கேட்கப்பட்டு, அவற்றிற்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இது போன்ற முகாம்கள் பொதுமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையேயான இடைவெளியை குறைக்க உதவுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...