பொள்ளாச்சியில் வணிக வளாகங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை: வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்

பொள்ளாச்சியில் விதிகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை எதிர்த்து வணிகர் சங்கங்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தின. மகாலிங்கபுரம், புதிய திட்ட சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மூடப்பட்டன.



Coimbatore: பொள்ளாச்சி நகரப் பகுதிகளில் விதிகளை மீறி கட்டப்பட்டதாகக் கூறப்படும் வணிக வளாகங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை எதிர்த்து வணிகர் சங்கங்கள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் உள்ள மகாலிங்கபுரம் மற்றும் புதிய திட்ட சாலை பகுதிகளில் வணிக பயன்பாட்டிற்கு அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பதாக கூறி, 2018-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்க பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.



இந்த உத்தரவை அடுத்து, கடந்த ஜூலை 11-ஆம் தேதி விதிகளை மீறி கட்டப்பட்டதாகக் கூறப்படும் கட்டடங்களுக்கு பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தது. இதனை எதிர்த்து, வணிகர்கள் பெரும் பாதிப்பை சந்திப்பதாகக் கூறி இன்று பொள்ளாச்சி நகரப் பகுதியில் வணிகர் சங்கங்கள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

மகாலிங்கபுரம், புதிய திட்ட சாலை, கடைவீதி போன்ற பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டதால் அப்பகுதி முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது. மேலும், வணிக வளாகங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தியும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் ராஜேஸ்வரி திடல் பகுதியில் அனைத்து வியாபாரிகள் மற்றும் வணிக சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறு வியாபாரிகள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர். மேலும், சீல் வைக்கும் நடவடிக்கையை கண்டித்து கோஷங்களும் எழுப்பப்பட்டன. இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக பொள்ளாச்சி நகரப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இன்று ஒரு நாள் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...