கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்வில் கருப்பு உடை அணிந்த மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு

கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்வில் கருப்பு உடை அணிந்த மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மாணவர்கள் வேறு உடை அணிந்து வருமாறு திருப்பி அனுப்பப்பட்டனர்.


கோவை: கோவை பி.எஸ்.ஜி கல்லூரி வளாகத்தில் குடிமையியல் பணி தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் குடிமையியல் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். ஆளுநரின் வருகையை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



நிகழ்வு நடைபெறும் அரங்கிற்கு கருப்பு உடையில் வந்த மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.



இதனால் காவல் துறையினருடன் பத்திரிகையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கருப்பு உடை அணிந்த மாணவ, மாணவியரை அரங்கிற்குள் அனுமதிக்க மறுத்த காவல்துறையினர், அவர்களை வேறு உடை அணிந்து வருமாறு கூறி திருப்பி அனுப்பினர்.

கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்க பல்வேறு கல்லூரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்களுக்கு தனித்தனி அறைகளில் நிகழ்ச்சியைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் போதுமான அளவில் அறைகள் ஏற்பாடு செய்யப்படாததால், நிகழ்ச்சிக்கு வந்த மாணவ, மாணவியரை உள்ளே அனுமதிக்காமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கின் வாயில் முன்பாக மாணவ மாணவியர் நிறுத்தி வைக்கப்பட்டனர். நீண்ட நேரத்திற்குப் பிறகே அவர்கள் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கருப்பு உடை அணிந்து வந்த மாணவர்களை காவல் துறையினர் அனுமதிக்க மறுத்து வேறு உடை அணிந்து வருமாறு திருப்பி அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...