உடுமலையில் நகர பாஜக சார்பில் ஆலோசனைக் கூட்டம்: மாவட்ட தலைவர் மங்களம் ரவி பங்கேற்பு

உடுமலையில் நகர பாஜக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் ரவி கலந்து கொண்டார். கடந்த தேர்தலில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடுமலை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு நகர தலைவர் கண்ணாயிரம் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் உடுமலை நகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய பாஜக பூத் கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் ரவி பேசுகையில், "பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சுமார் 2 லட்சம் வாக்குகள் மேல் பெற்றுள்ளது. குறிப்பாக உடுமலை நகராட்சியில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக 6,494 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்து அபார சாதனை புரிந்துள்ளது. இதற்கு நகர நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்றார்.

மேலும் அவர், "வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் சிறப்பாக பணியாற்றி நகராட்சி தலைவர், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பல்வேறு பதவிகளை பிடிக்க வேண்டும். வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வராக அண்ணாமலை வெற்றி பெற அனைவரும் இப்போதிலிருந்தே பாடுபட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.



இந்த கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, மாவட்ட பொது செயலாளர் வடுகநாதன், வர்த்தக அணி மாநில செயலாளர் கார்த்திகேயன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் பால்ராஜ், மாவட்ட பிரச்சார அணி தலைவர் சின்ராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராதிகா, நகர பொதுச் செயலாளர்கள் ஐயப்பன், சீனிவாசன், தங்கதுரை, நகர துணைத் தலைவர்கள் உமா குப்புசாமி, கணேஷ் ஆனந்த் செல்வி, கண்ணப்பன், நாச்சியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...