உடுமலையில் நகர பாஜக சார்பில் ஆலோசனைக் கூட்டம்: மாவட்ட தலைவர் மங்களம் ரவி பங்கேற்பு

உடுமலையில் நகர பாஜக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் ரவி கலந்து கொண்டார். கடந்த தேர்தலில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடுமலை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு நகர தலைவர் கண்ணாயிரம் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் உடுமலை நகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய பாஜக பூத் கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் ரவி பேசுகையில், "பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சுமார் 2 லட்சம் வாக்குகள் மேல் பெற்றுள்ளது. குறிப்பாக உடுமலை நகராட்சியில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக 6,494 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்து அபார சாதனை புரிந்துள்ளது. இதற்கு நகர நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்றார்.

மேலும் அவர், "வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் சிறப்பாக பணியாற்றி நகராட்சி தலைவர், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பல்வேறு பதவிகளை பிடிக்க வேண்டும். வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வராக அண்ணாமலை வெற்றி பெற அனைவரும் இப்போதிலிருந்தே பாடுபட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.



இந்த கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, மாவட்ட பொது செயலாளர் வடுகநாதன், வர்த்தக அணி மாநில செயலாளர் கார்த்திகேயன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் பால்ராஜ், மாவட்ட பிரச்சார அணி தலைவர் சின்ராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராதிகா, நகர பொதுச் செயலாளர்கள் ஐயப்பன், சீனிவாசன், தங்கதுரை, நகர துணைத் தலைவர்கள் உமா குப்புசாமி, கணேஷ் ஆனந்த் செல்வி, கண்ணப்பன், நாச்சியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...