உடுமலையில் அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் பெயரில் மோசடி: காவல் நிலையத்தில் புகார்

உடுமலையில் அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் பெயரில் மர்ம நபர்கள் முறைகேடு செய்துள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் பெயரில் மோசடி நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உடுமலையில் தமிழக அரசால் அங்கீகாரம் பெற்ற 23 ஆவண எழுத்தர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 6ஆம் தேதி, திருப்பூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலிருந்து லோகநாதன், முத்துக்குமார், ஜோதிலட்சுமி, சாத்ராக், சிவசங்கர், மணிவண்ணன், அமுல்ராஜ், அப்பாதுரை, ராஜேந்திரன், ஞானசேகரன் ஆகிய ஆவண எழுத்தர்களுக்கு வருகின்ற 19ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்ற அழைப்பாணை வந்துள்ளது.



இது குறித்து சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண எழுத்தர்கள் விசாரித்தபோது, மேற்கண்ட 11 ஆவண எழுத்தர்களின் பெயர்களைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் முறைகேடு செய்துள்ளனர் என்பது தெரிய வந்தது. சார்பதிவாளர் சிவக்குமாரை பணியிட மாற்றம் அல்லது துறை மாற்றம் செய்ய வேண்டும் என்றும், சார்பதிவாளர் லஞ்சம் அதிகமாக வாங்குவதாகவும், லஞ்சம் கொடுக்காவிட்டால் பத்திரப்பதிவு செய்ய மறுப்பதாகவும் கூறி புகார் அளித்துள்ளனர்.

ஆவண எழுத்தர்களின் பெயர் மற்றும் அலுவலக முகவரியை மர்ம நபர்கள் பயன்படுத்தி, அலுவலக முத்திரையை போலியாக தயாரித்து தவறாக பயன்படுத்தியுள்ளனர். இந்நிலையில், அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் மீது முறைகேடாக ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவண எழுத்தர்கள் சார்பில் உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...