கோவை நேரு விளையாட்டு அரங்கில் கால்பந்து பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை நேரு விளையாட்டரங்கில் கால்பந்து பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 40 வயதுக்குள்பட்ட தேசிய அளவில் சாதனை படைத்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 13 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவை நேரு விளையாட்டு அரங்கில் செயல்பட்டு வரும் கால்பந்து பயிற்சி மாவட்ட மையத்தில் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் Khelo India திட்ட நிதியுதவியில், தொடக்க நிலை கால்பந்து பயிற்சிக்கான மாவட்ட மையம் கோவை நேரு விளையாட்டரங்கில் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் முதல் 100 வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு நாள்தோறும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த மையத்தில் பயிற்சியாளராக பணியாற்ற, தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதுக்குள்பட்ட கால்பந்து வீரர் அல்லது வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். விண்ணப்பிக்க விரும்புவோர் சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, சர்வதேசப் போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருக்க வேண்டும்.


தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு மாதாந்திர பயிற்சிக் கட்டணமாக ரூ.25,000 வழங்கப்படும். இது நிரந்தரப் பணி அல்ல, முற்றிலும் தற்காலிகமானதாகும். விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கோவை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். இப்பணிக்கு ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு, கோவை மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி நடைபெறும். உடல் தகுதி, விளையாட்டுத் திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும் எனத் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...