கோவையில் 'டிமாண்டி காலனி பாகம் 2' படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு

கோவையில் 'டிமாண்டி காலனி பாகம் 2' படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து படம் குறித்த விவரங்களை பகிர்ந்தனர். ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகவுள்ள இப்படம் அனைத்து தொழில்நுட்ப அம்சங்களுக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளதாக தெரிவித்தனர்.


Coimbatore: கோவையில் 'டிமாண்டி காலனி பாகம் 2' படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து படம் குறித்த விவரங்களை பகிர்ந்தனர். இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர்கள் அருள்நிதி, அருண் பாண்டியன், நடிகைகள் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கோவை ஹோப்ஸ் பகுதியில் உள்ள டைடல் பார்க் வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நடிகர்கள் அருள்நிதி, அருண்பாண்டியன், முத்துகுமார், நடிகைகள் பிரியா பவானி சங்கர், அர்ச்சனா, இயக்குநர் அஜய் ஞானமுத்து, தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

படக்குழுவினர் கூறுகையில், "இந்த திரைப்படம் அனைத்து தொழில்நுட்ப விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை தழுவியே இந்த இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. வழக்கமான பேய் படங்களை போல் அல்லாமல் புதுவித அனுபவத்தை கொடுக்கும். திரையரங்குகளில் பார்த்தால் மட்டுமே அந்த அனுபவத்தை உணர முடியும்" என்றனர்.

மேலும், "இசையமைப்பாளர் சியாம்.சி.எஸ் சிறந்த பின்னணி இசையை கொடுத்து திகில் அனுபவத்தை தந்துள்ளார். VFX தொழில்நுட்பம் இப்படத்தில் முக்கிய பங்காற்றி உள்ளது. VFX நன்றாக வருவதற்காகவே அதிக நாட்கள் எடுத்துக் கொண்டோம்" என்றும் தெரிவித்தனர்.

அதே நாளில் மற்ற படங்களும் வெளியாவது குறித்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் அருள்நிதி, "வேண்டுமென்றே அந்த நாளில் இந்த படத்தை வெளியிடவில்லை. அந்நாளில் வெளியாகும் அனைத்து படங்களுமே வெற்றி பெற வேண்டும்" என்றார்.

அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அருள்நிதி, "தற்போது அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை. 2062ல் அது குறித்து யோசிக்கலாம். அப்போது நானும் உயிருடன் இருக்கமாட்டேன், நீங்களும் இருக்க மாட்டீர்கள்" என நகைச்சுவையாக பதிலளித்தார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 27 வேட்புமனுக்கள்: முக்கிய கட்சி வேட்பாளர்கள் இன்னும் தாக்கல் செய்யவில்லை

Coimbatore மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 27 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மாவட்டத்தில் இதுவரை 42 வேட்பாளர்கள் மன...

வெள்ளியங்கிரி மலையேற்றத்தில் நெஞ்சு வலியால் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

Coimbatore மாவட்டம் வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது, Pharm-D மாணவரான முகேஷ் குமார் (23) மார்பு வலியால் சுயநினைவை இழந்த...

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் S.தாமோதரனை நேரில் சந்தித்து வாழ்த்திய அண்ணாமலை

கோவை: வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அஇஅதிமுக சார்பில் கிணத்துக்கடவு தொகுதி வேட்பாளர...

கிணத்துக்கடவு தொகுதி வெற்றி வேட்பாளர் S.தாமோதரனை அண்ணாமலை நேரில் சந்தித்து வாழ்த்து

கோயம்புத்தூரில் BJP முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் NDA சார்பில் AIADMK கிணத்த...

நினைத்ததை சாதிக்கும் செயல்வீரர் செந்திலபாலாஜி - கோவையில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

கோவையில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், மின்துறை அம...

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...