கவி அருவியில் தடுப்பு வேலிகள் தற்காலிகமாக சீரமைக்கப்படுகின்றன

கோவை மாவட்டம் கவி அருவியில் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த தடுப்பு வேலிகள் தற்போது சீரமைக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகளுக்கான குளிக்கும் தடை தொடர்கிறது.


Coimbatore: கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குரங்கு அருவி என்றழைக்கப்படும் கவி அருவியில் தடுப்பு வேலிகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்ததன் காரணமாக கவி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் விளைவாக, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த தடுப்பு வேலி கம்பிகள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.



தற்போது, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை குறைந்ததால் அருவிக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. இதனால், அருவியில் தடுப்புக் கம்பிகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனினும், அருவிக்கு நீர்வரத்து சீராகாததால் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தடுப்பு வேலிகள் முழுமையாக சீரமைக்கப்படும் வரை மற்றும் அருவியின் நீர்வரத்து சீராகும் வரை குளிக்கும் தடை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...